உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

30 மில்லியன் செலவில் எரிக்கலம் காட்டு பாலம் நிர்மாணம்

முன்னாள் விவசாய நீர்பாசன கிராமிய பொருளாதார அபிவிருத்த இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாசவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்..அமீர் அலியில் வேண்டுகோள்களுக்கு அமைய விவசாய நீர்பாசன கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஹரிசனினால் எரிக்கலம் காட்டுப் பாலம் 30 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் உரையாற்றிய முன்னாள் விவசாய நீர்பாசன கிராமிய பொருளாதார அபிவிருத்த இராஜாங்க அமைச்சரும் அமீர் அலி அவர்களினால் முன்மொழியப்பட்ட விளாலவ ஓடை அணைக்கட்டை மிக விரைவாக நிர்மணிப்பதற்குரிய நிதியினை ஒதுக்கீட்டுத் தருவேன் என்று வாக்குறுதியளித்துள்ளார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சி.யோகேஸ்வரன் என்.சிறீநேசன் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர்அலியின் பிரத்தியே செயலாளர் எம்.தௌபீக் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க