உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

கதிர்காம திருவிழாவை முன்னிட்டு விஷேட போக்குவரது சேவை!

கதிர்காம திருவிழாவை முன்னிட்டு பண்டாரவளை இ.போ.ச. கதிர்காமம் செல்லும் பக்தர்கள் நலன் கருதி தற்காலிக பஸ் தரிப்பு நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

பண்டாரவளை நகரில் இருந்து இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பண்டாரவளை தொடருந்து நிலையத்தை அண்மித்து குறித்த பஸ் தரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு மற்றும் ஹட்டன் பகுதியில் இருந்து தொடருந்து மூலம் பண்டாரவளை வரும் பக்தர்கள் இந்த நிலையத்தில் இருந்து கதிர்காமத்திற்கு செல்ல முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க