உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

இன்று அதிகாலை இடம்பெற்ற தொடரூந்து விபத்தில் ஆணொருவர் பலி

கிளிநொச்சி 155ம் கட்டை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற தொடரூந்துடனான விபத்தில் ஆணொருவர் பலியாகியுள்ளார்.

கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த தொடரூந்து மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள தொடரூந்துக்கடவையிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த நபர் தொடரூந்து பாதையில் படுத்திருந்த போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளல் தெரிய வந்துள்ளது.

எனினும் விபத்து இடம்பெற்ற சம்பவம் தொடர்பான பூர்வாங்க விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த நபர் தொடர்பான அடையாளம் காணக்கூடிய எவையும் கிடைத்திராத நிலையில் பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநாச்சி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இதே பகுதியிலேயே கடந்த 25ம் திகதி புகைிரத கடவையில் இடம்பெற்ற விபத்தில் 6 படையினர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடதக்கது.

 

 

கருத்து தெரிவிக்க