உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஆட்பதிவு திணைக்களத்தின் ஒருநாள் சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியது

கணனி பிரச்சினை தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமையன்று தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்த ஆட்பதிவு திணைக்களத்தின் ஒருநாள் சேவை நடவடிக்கைகள் நாளை திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

இந்த தகவலை ஆட்பதிவு திணைக்களத்தின் தகவல் தொழில் நுட்ப ஆணையாளர் ஹர்ஷ இழுப்பிட்டிய தெரிவித்திருக்கின்றார்.

கணனி தொகுதியில் ஏற்பட்டிருந்த குறைப்பாடு காரணமாக கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்த ஆட்பதிவு திணைக்களத்தின் ஒருநாள் சேவை நிறுத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை திங்கட்கிழமையிலிருந்து இந்த நிலைமை சீர் செய்யப்படும் என்று அவர் மேலும் தெரிவித்திருக்கின்றார்.

ஆட்பதிவு திணைக்களத்தில் இந்த ஒருநாள் சேவையில் ஒவ்வொருநாளும் சுமார் ஆயிரம் பேர் வரையில் நன்மைகள் பெறுகின்றார்கள் எனவும் ஒவ்வொருநாளும் ஆயிரம் விண்ணப்பங்கள் சமர்பிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க