உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்முக்கிய செய்திகள்

கண்டியில் தேசியவாத பொதுபலசேனாவின் பேரணி: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

கண்டியில் இன்று பௌத்த பிக்குகளின் பேரணி நடைபெறவுள்ளமையை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

வலதுசாரி தேசியவாத அமைப்பான பொதுபலசேனாவின் கலகொட அத்தே ஞானசார தேரரின் தலைமையில் இந்தப்பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று காலையில் இருந்து வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெறுகின்ற நிலையில் பிற்பகல் 2 மணிக்கு போகம்பரை மைதானத்தில் ஒன்றுகூடல் இடம்பெறவுள்ளது.

இதன்போது நாட்டின் எதிர்காலத்தை மையப்படுத்தி அறிவிப்பு வெளியிடப்படும் என்று ஞானசார தேரர் அறிவித்துள்ளார்.

பெரும்பாலும் இந்த அறிவிப்பு எதிர்கால தேர்தலை மையப்படுத்தியே அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க