உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

‘வெளிநாட்டு சக்திகள் இலங்கையை ஆக்கிரமிக்க முயற்சிக்கின்றன’

சில வெளிநாட்டு சக்திகள் இலங்கையை ஆக்கிரமிக்க முயற்சிக்கின்றன, எனினும் அத்தகைய நிலைக்கு நான் இடமளிக்க மாட்டேன், என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ மொனராகலை மாவட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வு பிபிலை பொது விளையாட்டரங்கில் இன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

சோபா உடன்படிக்கை , மிலேனியம் சலஞ் உடன்படிக்கை, நிலம் தொடர்பான உடன்படிக்கை தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன.

அவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டாலும் இலங்கையின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய உடன்படிக்கை எவையும் கைச்சாத்திடப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க