உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

அரசியல் கைதிகளின் விடுதலை கோரி ஆர்ப்பாட்டம்

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய ஓரியும் அரசியல் கைதி சகாதேவனின் மரணத்திற்கு நீதி கோரியும் மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று இடம்பெற்றது

தமிழ் மக்கள் காப்பகத்தின் ஏற்பாட்டில் காலை 11 மணியளவில் இடம் பெற்ற இந்த ஆர்பாட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ். கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், சட்ட ஆலோசகர் கனகரட்ணம் . மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

இதன் போது அரசியல் கைதிகளை விடுதலை செய், நல்லாட்சியா நரி ஆட்சியா, அடக்காதே அடக்காதே தமிழ் மக்களை, பயங்கரவாத சட்டத்தை நீக்கு போன்ற வாசகங்கள் கொண்ட சுலோகங்கள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

கருத்து தெரிவிக்க