விளையாட்டு செய்திகள்

நீண்ட காத்திருப்புக்கு மத்தியில் நியூசிலாந்தின் கனவு நிஜமானது!

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நீண்ட காத்திருப்புக்கு மத்தியில் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கான வாய்ப்பை பெற்றுள்ளது.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில், பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று 11 புள்ளிகளை நியூசிலாந்துடன் பகிர்ந்து கொண்டாலும் ஓட்ட சராசரி விகிதத்தின் அடிப்படையில், நியூசிலாந்து அணியே முன்னிலை  பெற்றுள்ளது.

இதன்படி, நியூசிலாந்து அணியின் அரையிறுதி கனவு தற்போது நிஜமாகியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

நியூசிலாந்து அணி முதலாவது அரையிறுதிப் போட்டியில், இந்தியா அல்லது அவுஸ்ரேலிய அணியுடன் எதிர்வரும் 9ஆம் திகதி மோதவுள்ளது.

கருத்து தெரிவிக்க