உள்நாட்டு செய்திகள்புதியவை

இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளின் வங்கிகள் மீது சைபர் தாக்குதல்!

இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகள் சிலவற்றின் வங்கிகள் மீது சைலன்ஸ் என்ற இணையவழி சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு முதல் இந்தக் குழு செயற்படுவதாக சீ.டி.நெட் என்ற இணையத்தளம் செய்தியை வெளியிட்டுள்ளது.

இதேபோல, கடந்த ஆண்டு ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சிலவற்றின் வங்கிகள் மீது சைலன்ஸ் என்ற சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது இலங்கை, பங்களாதேஷ், இந்தியா மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளின் வங்கிகள் சிலவற்றின் மீது சைபர் தாக்குதல் நடத்தி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏதாவது வங்கிகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டமைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எவையும் இதுவரையில் வெளியாக்கப்படவில்லை என சீ.டி.நெட் செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க