உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

பலாலி விமானநிலையத்தை சர்வதேச விமானநிலையமாக மேம்படுத்தும் அரச நிகழ்வு இன்று

யாழ்ப்பாணம் பலாலி விமானநிலையத்தை சர்வதேச விமானநிலையமாக மேம்படுத்தும்நிகழ்வு இன்றைய தினம்உத்தியோக பூர்வமாகஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் உதவியுடன்பலாலி விமான நிலையம் புனரமைக்கப்பட்டு சிவில்விமான நிலையமாக மாற்றியமைப்பதற்கான அபிவிருத்தித் பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில் போக்குவரத்து மற்றும் சிவில்விமான சேவைகள் அமைச்சர் அர்ஜின ரணதுங்க பிரதமவிருந்தினராக்கக் கலந்து கொண்டுள்ளார்.

மேலும் புனரமைப்பு ஆரம்பம் தொடர்பில் அமைக்கப்பட்ட திரைக்கல்லை திரை நீக்கம்செய்து பணிகளையும் ஆரம்பித்து வைத்துள்ளார்.

இந் நிகழ்வில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், யாழிலுள்ள இந்தியதுணைதாதுவர், அரசஅதிகாரிகள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க