வெளிநாட்டு செய்திகள்

விமானப் பணிப்பெண்ணிடம் கடுமையாக நடந்து கொண்டவர் தற்கொலை

எயார் இந்தியா விமானத்தின் விமான பணிப்பெண்ணிடம் , தான் ஒரு சர்வதேச வழக்கறிஞர் எனவும், தனக்கு கூடுதலான மதுபானம் வழங்கப்படவில்லை எனவும் கூறி கடுமையாக நடந்து கொண்ட , சிமோனே பர்னஸ் (வயது 50)  என்ற பெண்ணை இலண்டன் நீதிமன்றம் கைது செய்தது.

இதனைத் தொடர்ந்து,  சிமோனே இலண்டன் நீதிமன்றில் தன் தவறுக்காக மன்னிப்பு கோரினார். சிமோனே ஒரு சர்வதேச வழக்கறிஞர் என்பதில் அவர் வெட்கப்பட வேண்டும் என கருத்து தெரிவித்த இலண்டன் நீதிமன்ற நீதிபதி, அவருக்கு 6 மாத கால சிறைத்தண்டனை வழங்க உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இரு வாரங்களுக்கு முன்னர் விடுதலையான சிமோனே கடும் மன உளைச்சல் காரணமாக அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

கருத்து தெரிவிக்க