உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஹிஸ்புல்லா நிதிமோசடி விசாரணைப் பிரிவில் இன்று ஆஜர்

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவில் இன்று காலை முன்னிலையாகியுள்ளார்.

மட்டக்களப்பு சவூதி அரேபியப் பல்கலைக்கழகத்தை நிர்மாணிப்பதற்காக பெறப்பட்ட நிதி தொடர்பான விசாரணைகள் அவரிடம் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய இன்றைய தினம் காலை 10.15 அளவில் பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகி சாட்சியமளித்து வருகின்றார்.

இதேவேளை நேற்றைய தினமும் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா திட்டமிடப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க