விளையாட்டு செய்திகள்

உலகக் கிண்ண அரையிறுதிக்குத் தகுதி பெற்ற அணிகள்!

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அவுஸ்ரேலியா, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்குத் தகுதியை பெற்றுள்ளன.

அவுஸ்ரேலிய அணி 14 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளதுடன் அரையிறுதிக்கும் தகுதி பெற்றது.

இதையடுத்து, 13 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்திய அணியும் அரையிறுதிக்கான வாய்ப்பை பெற்றது.

இந்த நிலையில்,நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை தோற்கடித்ததன் ஊடாக அரையிறுதிக்கான வாய்ப்பை இங்கிலாந்து பெற்றுள்ளது.

இதேவேளை, அனைத்து லீக் போட்டிகளிலும் விளையாடியுள்ள நியூசிலாந்து அணி 11 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் உள்ளது.

இதன்படி, மீதமுள்ள ஒரு போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் நான்காம் இடத்தை பெறுவதுடன் அரையிறுதிக்கான தகுதியை பெற வாய்ப்பும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க