உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளராக சஜித்! 8 ஆம் திகதி முடிவை அறிவிப்பார் ரணில்

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் எதிர்வரும் 8 ஆம் திகதி இறுதி முடிவு எடுக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

ஆளுங்கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் திங்கட்கிழமை (8) மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது.

இதில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள பங்காளிக் கட்சிகளின் உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளனர். இதன்போது ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் குறித்தே கூடுதல் கவனம் செலுத்தப்படும் என சிறிகொத்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

குறிப்பாக சஜித் பிரேமதாசவின் பெயரை பங்காளிக்கட்சிகள் முன்மொழியக்கூடும் என்றும், இதற்கு ஐ.தே.கவிலுள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவளிக்ககூடும் என்றும் அறியமுடிகின்றது.

அதேவேளை, நாடாளுமன்றக்குழுக் கூட்டம் முடிவடைந்த பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், சஜித் பிரேமதாசவுக்குமிடையில் விசேட சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

 

 

 

 

 

கருத்து தெரிவிக்க