உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

சவூதியிலிருந்து கடத்திவரப்பட்ட நவீன கசிப்பு தயாரிப்பு இயந்திரத்துடன் ஒருவர் கைது

சவூதி அரேபியாவிலிருந்து கடத்திவரப்பட்ட கசிப்பு தயாரிக்கும் நவீன இயந்தரத்துடன் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் மட்டக்களப்பு பாலையடித்தோணா பகுதியை சேர்ந்தவர் என மதுவரி திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி எஸ்.தயாளேஸ்ரகுமார் தெரிவித்துள்ளார்.

குறித்த இயந்திரம் மின்சாரத்தின் துணையுடன் மிகவும் இலகுவான முறையில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியை மேற்கொள்ளக்கூடிய வகையில் அமைந்திருந்தது என மேலும் தெரிவித்துள்ளார்.

கிரான் பிரதேச செயலகப்பிரிவிலுள்ள பாலையடித்தோணா பகுயில் வீடொன்றில் குறித்த இயந்திரத்தில் கசிப்பு தயாரித்துக் கொண்டிருந்தபோதே இவர் கைது செய்யப்பட்டதாக மதுவரி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மேலதிக விசாரணைகளை மதுவரி அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க