உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கோட்டாவை சந்தித்த சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர்

மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற தாம் தயார் என்று பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் சிகிச்சைப் பெற்றுவரும் அவரை நேற்று எதிர்க்கட்சி நாடாளுமன்றக்குழுவினர் சென்று சந்தித்தனர்.
பிரசன்ன ரணதுங்க, தேனுக விதானகமகே, பிரியங்கர ஜெயரத்ன உட்பட்டவர்கள் இந்தக்குழுவில் அடங்கியிருந்தனர்.

இவர்களிடம் தமது உடல்நிலை தேறிவருவதாக குறிப்பிட்ட கோட்டாபய ராஜபக்ச எந்த காரணத்துக்காகவும் தாம் ஜனாதிபதி வேட்பாளர் நிலையை விட்டுக்கொடுக்கப்போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணனும் கோட்டாபய ராஜபக்சவை வைத்தியசாலைக்கு சென்று சந்தித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க