உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

கதிர்காம சைவ சம்பிரதாயம் ஏன் மாற்றப்பட்டது?

பாரம்பரிய சைவ சம்பிரதாயத்தை மாற்ற திட்டமிட்ட சதியா? ஏன சந்தேகம் எழுந்துள்ளதாக அடியார்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கதிர்காம கந்தனின் வருடாந்த உற்சவக் கொடியேற்றம் புதன்கிழமை (03) இரவு இடம்பெற்றது.

பாரம்பரிய சைவ சம்பிரதாயத்தின்படி கதிர்காம முருகன் கோயிலில் முருகனின் சேவல் கொடி ஏற்றப்பட்டு, அங்கிருந்து தெய்வானை அம்மன் கோயிலுக்கு கொடி எடுத்து வரப்பட்டு, அங்கு கொடிக்கு பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டபின் பக்கீர் மடத்திற்கு (இன்றைய பள்ளிவாசலின் முன்பக்கம்) கொண்டு வரப்பட்டு அங்குள்ள கொடிக்கம்பத்தில் கட்டப்படும். கதிர்காமம் பற்றி எழுத்தப்பட்டுள்ள பழைய நூல்களில் இந்த விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் தற்போது கதிர்காமத்தில் வருடாந்த திருவிழா ஆரம்பிக்கும் போது கதிர்காமத்தில் உள்ள இஸ்லாமிய பள்ளிவாசலிலேயே கொடி ஏற்றப்படுகிறது. முருகன் கோயிலிலோ, தெய்வானை அம்மன் கோயிலிலோ கொடி ஏற்றப்படுவதில்லை. அதுவும் அரபு எழுத்துக்கள் எழுதப்பட்ட பச்சை நிறக் கொடியே ஏற்றப்படுகிறது.

இந்த பாரம்பரிய சைவ சம்பிரதாயம் ஏன் மாற்றப்பட்டது? இந்துசமய அமைப்புக்கள் இந்த விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமா? என்று சைவ அடியார்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்

கருத்து தெரிவிக்க