வெளிநாட்டு செய்திகள்

லாகூர் விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு : இருவர் பலி

பாகிஸ்தான் லாகூரில் உள்ள அல்லமா இக்பால் சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாகி உள்ளனர். இதையடுத்து அந்நாட்டில் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் சந்தேகிக்கப்பட்ட அர்ஸத் மற்றும் ஷான் என்ற இருவரை  பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் , முன் விரோதம் காரணமாக இந்த கொலைகள் நடந்திருக்கலாம் என்று பொலிசார் தெரிவித்தனர். உயிரிழந்த இருவரும் மக்காவுக்கு புனித யாத்திரை சென்று விட்டு திரும்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது .

கருத்து தெரிவிக்க