சினிமா

களவாணி 2 படத்தை வெளியிட நீதிமன்றம் தடை

சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘களவாணி 2’ படத்தை வெளியிட நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இயக்குனர் சற்குணம் இயக்கிய களவாணி திரைப்படம் 2010-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது.

விமல் மற்றும் ஓவியா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சரண்யா பொன்வண்ணன், இளவரசு, கஞ்சா கருப்பு என முதல் பாகத்தில் நடித்த அத்தனை பேரும் இந்த படத்திலும் நடிக்கிறார்கள்.

மேலும், மயில்சாமி போன்ற இன்னும் சில முக்கிய நடிகர்களும் படத்தில் நடித்திருக்கிறார்கள்.

துரை சுதாகர் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.

இப்படத்தை ஜூலை 5ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்த நிலையில், படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெயக்குமார் களவாணி 2 படத்தை வெளியிட தடை கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு நிலையில் களவாணி 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம்.

 

கருத்து தெரிவிக்க