உள்நாட்டு செய்திகள்புதியவை

காவல்துறை அதிகாரி மீது சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணை

அதுலுகமையில் ஒரு பெண்ணை துன்புறுத்தியது தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பண்டாரகம காவல்துறை அதிகாரி மீது காவல்துறை சிறப்பு புலனாய்வு பிரிவு (எஸ்.ஐ.யு) விசாரணை நடத்தியுள்ளது.

இதுதொடர்பான அறிக்கை ஒரு மாதத்திற்குள் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக காவல்துறை ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

வேறுபட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்ததற்காக அந்தப் பெண் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பான வழக்கு பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றது.

எனினும் இந்த சம்பவம் தொடர்பாக விரைவாக செயற்பட தவறியதாக பண்டராகம காவல்துறை மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க