உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அரச வங்கி ஊழியர்கள் போராட்டம்

அரச வங்கிகளின் ஓய்வூதியர்களின் பிரச்சனைக்கு உடனடித் தீர்வை வழங்குமாறு கோரி வங்கி ஊழியர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

யாழ் போதான வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள இலங்கை வங்கி மேற்பரப்பில் கிளை வாசலில் இன்று மதியம் 12.30 தொடக்கம் 1.30 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது ஓய்வூதியர்களுக்கான கொடுப்பனவுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இதற்கு உடனடித் தீர்வை வழங்க வேண்டுமென வலியுறுத்தியிருந்தனர்.

மேலும் இதற்குரிய நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்பட்டு இப்பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்பட வேண்டுமென்றும் இல்லையேல் அடுத்த கட்ட போராட்டங்களை மேற்கொள்ளப்பட்ட போவதாகவும் தெரிவித்துள்ளனர்

கருத்து தெரிவிக்க