உள்நாட்டு செய்திகள்புதியவை

ஹேமசிறி பேர்னாண்டோவும் பூஜித் ஜெயசுந்தரவும் நீதிமன்றில் முன்னிலை!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பேர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர ஆகியோர் இன்று புதன்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

கடந்த ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் இருவரும் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுக்கவும் இருவரினது வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ளும் வகையில் நீதிமன்ற அனுமதியை கோரவுள்ளதாக பாதுகாப்புத் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்து தெரிவிக்க