விளையாட்டு செய்திகள்

உலக கிண்ண கிரிக்கெட் : வலுவான நிலையில் இந்தியா!

பங்காதேஷ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வலுவான நிலையில் ஆடிவருகிறது.

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான 40-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

இதில் நாணயசுழட்சியில் வென்ற இந்திய அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர்.

இருவரும் இணைந்து திறம்பட ஆடி சிறப்பான தொடக்கத்தை அமைத்தனர்.

தற்போது இந்திய அணி 36 ஓவர்களில் இரண்டு விக்கட்டை இழந்து 217 ஓட்டங்களை பெற்றுள்ளது.

கருத்து தெரிவிக்க