உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

தலைமன்னார்விபத்து. சிகிச்சை பலனின்றி இளைஞன் மரணம்.

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் நேற்று திங்கட்கிழமை மதியம் இடம் பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் ஒருவர் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் ஒரு இளைஞன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அரச பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டபோதே  குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த 21 வயதுடைய இளைஞர் தலைமன்னார் கிராமத்தைச் சேர்ந்த கா.கார்லின் ஜேம்ஸ் டயஸ் என தெரிய வந்துள்ளது.

28 வயது நிரம்பிய மற்றைய இளைஞன் தொடர்ந்தும் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க