உள்நாட்டு செய்திகள்புதியவை

ரயில்வேதுறை தொழிற்சங்க போராட்டம் – சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற தீர்மானம்

ரயில்வேதுறை தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுப்பது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரயில்வேயின் பொது முகாமையாளர் திலந்த பெர்னாண்டோ செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, தொழிற்சங்கங்களின் தலைவர்களிடமிருந்தும் அறிக்கைகளை பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், ரயில்வே தொழிற்சங்கங்களின் இந்த நடவடிக்கை விதிமுறைகளை மீறும் செயல் எனவும் பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.

கருத்து தெரிவிக்க