விளையாட்டு செய்திகள்

நம்பிக்கைக்குரிய கிரிக்கெட் அணியொன்றை உருவாக்க வேண்டும்: ஹரின் பெர்ன்ணாடோ

இலங்கை அணியில் அடிக்கடி மாற்றங்களை செய்வதற்குப் பதிலாக நம்பிக்கைக்குரிய அணியொன்றை உருவாக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் நிலையில், ஊடகவியலாளரிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இரண்டு வருட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்து நடவடிக்கைகளை மேற்கொண்டால் சக்தி வாய்ந்த அணியை உருவாக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் நிர்வாக குழு மாற்றமடைந்த போதும் விளையாட்டில் மாற்றம் அடையவில்லை எனவும் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க