உள்நாட்டு செய்திகள்புதியவை

கல்முனை ஆதார வைத்தியசாலையை புகைப்படம் எடுத்தவர் கைது!

கல்முனை ஆதார வைத்தியசாலையை புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகபரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று திங்கட்கிழமை காலை வைத்தியசாலையின் முன் பகுதியில் ஒருவர் தனது கையடக்க தொலைபேசி ஊடாக வைத்தியசாலையை காணொளியாக பதிவு செய்துள்ளார்.

இதையடுத்து அவரிடம் வைத்தியசாலையின் பாதுகாப்பு ஊழியர்கள் எதற்காக காணொளி எடுக்கின்றீர்கள் எனக் கேட்ட போது அதற்கு அவர் சந்தேகத்திற்கிடமாக பதிலளித்தமையினால் வைத்தியசாலை நிர்வாகத்தின் கவனத்திற்கு பாதுகாப்பு ஊழியர்கள் எடுத்து சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக உடனடியாக கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய காணொளி எடுத்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, குறித்த சந்தேக நபர் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க