உள்நாட்டு செய்திகள்புதியவை

மரண தண்டனை தொடர்பில் உயர்மட்ட கலந்துரையாடல்!

இலங்கையில் அமுலுக்கு வரவுள்ள மரண தண்டனை தொடர்பில் விஷேட உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், வெளிநாட்டுத் தூதுவர்களுக்கும் இடையில் இந்த கலந்துரையாடல் கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

மேலும், போதைப்பொருள் கடத்தலுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு மரணதண்டனை வழங்குவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை, மரணதண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்தின் மூலம் தமது அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகக் கூறி உயர்நீதிமன்றத்தில் இன்று 10 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க