உள்நாட்டு செய்திகள்புதியவை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்த வெப்பம்!

மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இன்று செவ்வாய்க்கிழமை 2ஆம் திகதி அதிக வெப்பநிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அத்துடன், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் வடக்கு, வட மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் காற்று வீசக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க