உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

‘தயாசிறி சாட்சியமளிக்க வராவிட்டால் கடும் நடவடிக்கை’

விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் தயாசிறி ஜயசேகர ஆஜராகாவிட்டால் அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவுக்குழுவின் தலைவர் ஆனந்த குமார சிறி தெரிவித்தார்.

21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திவரும் விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் முன்னிலையாகி சாட்சியமளிக்குமாறு தயாசிறி ஜயசேகரவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

எனினும், குறித்த அழைப்பை நிராகரித்த அவர் , தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகப்போவதில்லை எனவும் திட்டவட்டமாக அறிவித்தார்.

இந்நிலையில் எதிர்வரும் 10 ஆம் திகதி சாட்சியமளிக்கவருமாறு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. ஆனால், தனது நிலைப்பாட்டில் தயாசிறி ஜயசேகரவும் உறுதியாக இருந்துவருகிறார்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே பிரதி சபாநாயகரால் மேற்படி அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

கருத்து தெரிவிக்க