உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

படகு மூலம் இந்தியா சென்ற இளைஞர்கள் தொடர்ந்தும் விசாரணை

இலங்கையில் இருந்து கடல் பயணத்தின் ஊடாக தமிழகம் சென்ற மூன்று இலங்கையர்கள் தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன.

இவர்கள் மூவரும் கடந்த சனிக்கிழமை இரவு 11 மணியளவில் நாகப்பட்டிணம், வேதாரணியம் கரையை சென்றடைந்தனர்.

இதன்போது அவர்களை இந்திய கரையோர காவல்படையினர் கைதுசெய்தனர்.

விசாரணையின்போது அவர்களிடம் இருந்து எவ்வித உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களும் இருக்கவில்லை.

அதேநேரம் அவர்கள் பயணித்ததாக கூறப்படும் கண்ணாடி இழைப்படகு ஒன்றையும் படையினர் கைப்பற்றினர்.

திருகோணமலை மூதூர் தக்வா நகரை சேர்ந்த 23 வயதான ஏஆர் நிகாஸ், திருகோணமலை மூதூர் நெய்தல் நகரைச் சேர்ந்த 33வயதான மொஹமட் ராஜீஸ், கிளிநொச்சி தர்மபுரத்தை சேர்ந்த வசீகரன் ஆகியோரே கைதுசெய்யப்பட்டவர்களாவர்.

கருத்து தெரிவிக்க