உள்நாட்டு செய்திகள்

‘மரண தண்டனை’ – சபையில் விவாதம் நடத்த தயார்!

இலங்கையில் மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்தும் தீர்மானம் தொடர்பில்  நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகவே இருப்பதாக சபை முதல்வரான அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

” நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தால் – விவாதத்துக்கான திகதியை நிர்ணயிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றும் அவர் கூறினார்.

மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான நான்கு கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

கருத்து தெரிவிக்க