உள்நாட்டு செய்திகள்புதியவை

பூஜித், ஹேமசிறி பெர்னாண்டோவை கைது செய்ய உத்தரவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டில் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜெயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இன்று (ஜூலை 1) தற்போது அதிகாரத்தில் உள்ள காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

இதேவேளை பொலிஸ் மா அதிபர் புஜித் ஜெயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை சந்தேகநபர்களாக பெயரிடுமாறும் சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க