உள்நாட்டு செய்திகள்புதியவை

மட்டு பல்கலைக்கழகத்தின் மேலதிக தகவல்களை வழங்கினார் தேரர்

நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரர் இன்று காலை குற்றவியல் விசாரணை பிரிவுக்குச் சென்று மட்டக்களப்பு பல்கலைக்கழகம் (பிரைவேட்) லிமிடெட் குறித்த கூடுதல் தகவல்களை வழங்கியுள்ளார்.

பல்கலைக்கழகம் தொடர்பாக பல்வேறு நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் சிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தேரர் குறிப்பிட்டார்.

ஊடகங்களுடன் பேசிய அவர், பல்கலைக்கழகம் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான ஒரு அமைப்பின் ஒரு பகுதியாகும் என குறிப்பிட்டுள்ளார்.

உயர்கல்வி அமைச்சுடன் இணைக்கப்பட்ட பிற நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட அனைத்து தகவல்களும் நிதி குற்றவியல் விசாரணை பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள தாக தேரர் மேலும் கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க