உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

பாடசாலை உயர்தர மாணவர்களுக்கு Tab வழங்க அமைச்சரவை அனுமதி

பாடசாலையில் கல்வி பயிலும் உயர்தர மாணவர்களுக்கு டெப் (Tab) வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தேசிய பாடசாலைகளில் கல்வி பயிலும் உயர்தர மாணவர்களில் Pilot Project யை முன்னெடுக்கும் மாணவர்களுக்கு மாத்திரமே டெப் வழங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் டெப் (Tab) வழங்கும் இத்திட்டத்தால் 175,000 பாடசாலை மாணவர்களும், 28,000 ஆசிரியர்களும் பயனடைய இருந்தமை குறிப்பிடத்தக்கது.

5 பில்லியன் ரூபா செலவில் இந்த திட்டத்தினை முன்னெடுக்க தேவை இல்லை எனவும் டெப் (Tab) வழங்குதவன் மூலம் நிதி வீண் விரயமாவதாகவும் ஜனாதிபதி தெரிவித்த கருத்திற்கு அமைவாகவே அமைச்சரவை தற்போதைய ஒப்புதலை வழங்கியுள்ளது.

கருத்து தெரிவிக்க