உள்நாட்டு செய்திகள்புதியவை

காவல்துறையினர் தாக்கியதில் ஒருவர் காயம்: சிகிச்சை தொடருகிறது

கினிகத்தேனை காவல் நிலைய அதிகாரிகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் 28 வயது நபர் கினிகத்தேனை பகுதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காவல்துறையினர் தாக்கியதில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.

குறித்த நபர் இன்று காலை 11.30 மணியளவில் கினிகத்தேனை காவல் நிலையத்திற்கு வந்த இரு பிள்ளைகளின் தந்தை என கூறப்படுகிறது.

அவர் தனது சகோதரி மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கு இடையே இடம்பெற்ற பண கொடுக்கல் வாங்கல் தொடர்பாக அளிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணையில் சிக்கியுள்ளார்.

தனக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையிலான மோதலைத் தொடர்ந்து நிலையத்தில் இருந்த காவல்துறை அதிகாரிகள் தாக்கி படிக்கட்டுக்கு கீழே தள்ளியதாக பாதிக்கப்பட்டவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அவர் தொடர்பில் எந்த முறைப்பாடுகளையும் இல்லை எனவும் எவரும் தாக்கப்பவில்லை எனவும் காவல்துறைக்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதனிடையே காயமடைந்த நபர் ஆரம்ப சிகிச்சையின் பின்னர் நாவலப்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்

கருத்து தெரிவிக்க