வெளிநாட்டு செய்திகள்

புனேவில் அனர்த்தம்:குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழப்பு

மராட்டிய மாநிலத்தின் புனேவில் நேற்று முதல் பெய்து வந்த கனமழையால் அடுக்குமாடி குடியிருப்பின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

புனே அருகே உள்ள கொந்த்வா என்ற இடத்தில் குடியிருப்பு கட்டிடத்தின் 60 அடி நீள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 15 பேர் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

இந்த அனர்த்தத்தில் அருகில் இருந்த குடிசைகளும் இடிபாடுகளுக்குள் சிக்கியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் வாகனங்கள் இதனால் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க