உள்நாட்டு செய்திகள்புதியவை

மரண தண்டனையை அமுல்ப்படுத்த சபாநாயகர் கடும் எதிர்ப்பு

மரண தண்டனையை அமுல்ப்படுத்துவதற்கு சபாநாயகர் கரு ஜெயசூரியவும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மரண தண்டனையை நிறைவேற்றுவது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள சபாநாயகர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கையில், கடந்த நாங்கு தசாப்தங்களுக்கும் மேல் மரண தண்டனை இரத்து செய்யப்பட்டு இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

புதிய ஒரு சட்டத்தை அமுல்ப்படுத்த முன்னர் நாட்டின் நீண்ட கால நெறிமுறை, பொருளாதார,  சட்ட மற்றும் கலாச்சார விளைவுகள் குறித்து தீவிரமாக மதிப்பீடு செய்ய வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

கருத்து தெரிவிக்க