சினிமா

மலையாள திரையுலகில் கால்பதிக்கவுள்ள பாகுபலியின் கதாசிரியர்!

எஸ். எஸ். ராஜமௌலியின் இயக்கத்தில் மிகப் பிரமாண்டமாக வெளியாகிய பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியை அடைந்திருந்தது . அதற்குரிய முக்கிய காரணங்களில் ஒன்றாக விளங்கியவர் படத்தின் கதாசிரியர் விஜயேந்திர பிரசாத், அதாவது ராஜமௌலியின் தந்தை. இவர் இப்படத்திற்கு மட்டுமில்லாது இவர் ஹிந்தியில் வெளியாகிய பஜ்ரங்கி பைஜான் மற்றும் மணிகர்ணிகா ஆகிய படங்களுக்கும் கதை எழுதி தன்னுடைய வெற்றி பயணத்தை வெற்றிகரமாக தொடர்கிறார். இந்நிலையில் மலையாள திரையுலகில் மிக பிரமாண்டமாக உருவாகவுள்ள படம் ஒன்றிற்கு கதை எழுத விஜந்திர பிரசாரத்திற்கு அழைப்பு வந்துள்ளது. இப்படமும் வரலாற்று பின்னணியில் தான் உருவாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க