விளையாட்டு செய்திகள்

கை நழுவிப்போன இலங்கையின் உலகக் கிண்ண கனவு!

உலகக் கிண்ணத் தொடரில் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இலங்கை தவறவிட்டுள்ளது.

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற 35ஆவது லீக் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வியை சந்தித்தது. இதன்காரணமாக இலங்கை அணி இரண்டு புள்ளிகளை இழந்துள்ளது.

இந்த நிலையில், மீதமுள்ள இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றாலும் இலங்கை அணியின் அரையிறுதிக் கனவு இலங்கை அணியின் கையில் இருந்து நழுவிப்போயுள்ளது.

இங்கிலாந்து, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் போன்ற அணிகள் இனிவரும் போட்டிகள் அனைத்திலும் தோல்விகளை சந்தித்து, இலங்கை அணி மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மாத்திரம் ஓரளவுக்கு வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகின்றது.

 

கருத்து தெரிவிக்க