உள்நாட்டு செய்திகள்புதியவை

மரண தண்டனையை அமுல்படுத்த இடமளிக்கப்போவதில்லை: ஐ.தே.க.

இலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்த இடமளிக்கப்போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மரண தண்டனையை அமுல்படுத்துவது குறித்த அறிவிப்புக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மரண தண்டனையை அமுல்படுத்துவது நாகரீகமடைந்த நாடொன்றுக்குப் பொருந்தாது என்பதால் இலங்கைக்கும் அது பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எக்காரணங்கொண்டும் மரண தண்டனையை அமுல்படுத்த தாம் இணங்கப்போவதில்லை என்றும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

நாட்டின் பிரதான கட்சி என்ற அடிப்படையிலும் அரசாங்கத்தை நடத்தும் கட்சி என்ற அடிப்படையிலும் தாம் இடமளிக்கமாட்டோம் எனவும் ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க