உள்நாட்டு செய்திகள்புதியவை

கதிர்காமம் ஆடிவேல் 3ஆம் திகதி ஆரம்பம்!

கதிர்காமம் ஆடிவேல் திருவிழா எதிர்வரும் ஜூலை 03 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 18 ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளது.

இதை முன்னிட்டு பாதயாத்திரிகர்கள் கதிர்காமத்திற்கு செல்லும் காட்டுப்பாதையான குமண யால சரணாலயம் நேற்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

சுமார் 2000க்கும் அதிகமான பக்தர்களின் பங்குபற்றுதலுடன் காட்டுப்பாதை திறப்பு மிக்கோலாகலமாக இடம்பெற்றது.

இந்த நிகழ்வில், விசேடமாக இந்துக்கலாசார அமைச்சர் மனோகணேசன் கலந்துகொண்டு காட்டுப்பாதையை திறந்து வைத்தார்.

அவருடன், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ. வேலுகுமார், காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கி. ஜெயசிறில், அம்பாறை மாவட்ட அரச அதிபர் டி.எம்.எல். திசாநாயக்க, அம்பாறை மாவட்ட மேலதிக அரச அதிபர் வே. ஜெகதீசன் உள்ளிட்ட அதிகாரிகள் பாதுகாப்பு உயரதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

கருத்து தெரிவிக்க