சினிமா

தமிழ் சினிமாவை புறக்கணிக்கின்றாரா கீர்த்தி சுரேஷ்?

மலையாள சினிமாவில் அறிமுகமாயிருந்தாலும் தமிழ் சினிமாதான் கீர்த்தி சுரேஷை வளர்த்து விட்டது என்றே கூறலாம். தெலுங்கில் இறுதியாக “மகாநதி” படத்தில் நடித்த பின்பு வேறு தெலுங்குப் படங்களில் நடிக்க சம்மதிக்காமல் இருந்தார். எனினும், தற்போது அடுத்தடுத்து தெலுங்கு படங்களில் நடிக்க சம்மதித்துள்ளார். அதுமட்டுமின்றி ஹிந்தி படம் ஒன்றிலும் நடிக்கவுள்ளார். கீர்த்தி சுரேஷ் தீடீரென தமிழ் சினிமாவை புறக்கணிக்கும் காரணத்தை அறிய இதுபற்றி விசாரித்த போது தமிழை விட தெலுங்கில் அதிக சம்பளம் தருவதே காரணமாக உள்ளதாம். தெலுங்கில் அவர் நடிக்க சம்மதிருக்கும் படங்களில், முன்னனி நடிகர்கள் ஜோடியாக நடிக்கவில்லை எனவும், இரண்டாம் நிலை நடிகர்கள் தான் நடிக்க உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழில் முன்னணி நடிகர்களுடன் மட்டுமே நடிப்பேன் என்று சொன்னவர், தெலுங்கில் அதற்கு மாறாக நடிக்க சம்மதித்திருப்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது.
எது எப்படியாயினும், தமிழ் சினிமா பக்கம் இப்போதைக்கு கீர்த்தி சுரேஷ் வரமாட்டார் என்பது தெரிகிறது.

கருத்து தெரிவிக்க