உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

சீ.வி.விக்னேஷ்வரனின் குற்றச்சாட்டுக்கு பதில் வழங்கிய சித்தார்த்தன்

தமிழ் தேசிய கூட்டமைப்பினை முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் சாடியுள்ள நிலையில் அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் பதிலளித்துள்ளார்.

சுன்னாகம் கந்தரோடையிலுள்ள அவரது இல்லத்தில் நடத்திய ஊடக சந்திப்பின் போது அவர் பதில் வழங்கியுள்ளார்.

தமிழ் சமூகத்தில் தாய் மாமனுக்கு ஒரு அந்தஸ்த்து உள்ளது. அந்த அர்த்தத்தில்தான் தமிழ்தேசிய கூட்டமைப்பு மாமா வேலை பார்க்கிறது என முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கூறினாரா? அல்லது அதற்கு வேறு அர்த்தங்கள் உள்ளதா என நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் கேள்வி எழுப்பி உள்ளார்.

உண்மையில் மாமா வேலை என்ற கருத்தையே தன்னால் சரியாக விளங்கிக் கொள்ள முடியவில்லை.

எங்களை பொறுத்தளவில் நாங்கள் மக்களுடைய பிரச்சினைகளுக்காக அரசாங்கத்துடன் பேசுகிறோம். ஒரு அரசியல் தரப்பாக,  எங்களுக்கு அந்த பொறுப்பும் கடமையும் இருக்கின்றது.

எந்த அரசியல் கட்சிகளும் மக்களைப் பிரதிநித்துவப்படுத்துகின்ற போது மக்களுடைய பிரச்சனைகளை எடுத்துக் கூற வேண்டியது அதற்காக அழுத்தங்களைக் கொடுக்க வேண்டியது அந்தக் கட்சிகளினுடைய கடமை. அதனையே நாங்கள் செய்கின்றோம் என் அவர் விளக்கமளித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க