விளையாட்டு செய்திகள்

உலக கிண்ண கிரிக்கட்- இந்திய, மேற்கிந்திய அணிகள் இன்று பலப்பரீட்சை

உலக கிண்ண தொடரில் மென்செஸ்டரில் இன்று நடைபெறும் 34-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-மேற்கிந்திய அணிகள் மோதுகின்றன.

நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத இந்திய அணி 4 வெற்றி (தென்ஆப்பிரிக்கா, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக), ஒரு முடிவில்லை (நியூசிலாந்துக்கு எதிராக) என்று 9 புள்ளியுடன் 3-வது இடத்தில் உள்ளது.

இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு ஏறக்குறையை உறுதியாகி விடும்.

மேற்கிந்திய அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 105 ஓட்டங்களில் வெற்றிகொண்டது. அதன் பிறகு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பங்களாதேஷ், நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டங்களில் வரிசையாக சரிவை கண்டது. இதற்கிடையே தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

6 ஆட்டத்தில் வெறும் 3 புள்ளி மட்டுமே எடுத்துள்ள மேற்கித்திய அணிக்கு இப்போது எஞ்சிய 3 ஆட்டங்களிலும் உயரிய ஓட்டங்களுடன் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நிலை காணப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க