வெளிநாட்டு செய்திகள்

சீனாவில் இரும்பு கடையில் தீ விபத்து

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் தான்சூ நகரில் இருந்த இரும்பு கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று காலை வழக்கம் போல் தொழிலாளிகள் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது , திடீரென கடையில் தீப்பிடித்தது. சற்று நேரத்தில் தீ பரவி கடை முழுவதும் எரிந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கடையை விட்டு வெளியே ஓட முயன்றனர். ஆனால் நாலாபக்கமும் தீ பரவியதால் உள்ளே சிக்கிக் கொண்டனர்.

இவ்வாறிருக்க அருகில் உள்ளோர் கொடுத்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இவ்விபத்தில் 6 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இரும்பு கடையில் தீ பிடித்தது பற்றி உடனடியாக எதுவும் தெரியவில்லை. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கருத்து தெரிவிக்க