உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

சுதந்திர கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான 6ஆம் கட்ட பேச்சுக்கள்!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான ஆறாம்  கட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளன.

எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இன்று புதன்கிழமை இந்த பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக கட்சி வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 17 ஆம் திகதி புதிய கூட்டணி அமைப்பது குறித்து இரண்டு கட்சிகளுக்கும் இடையில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று இடம்பெறுகிறது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை தெரிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு அரசியல் நகர்வுகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க