உள்நாட்டு செய்திகள்புதியவை

சஹ்ரானின் மனைவியிடம் மூடிய அறையில் விசாரணை!

ஈஸ்டர் தினத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமின் மனைவியிடம் மூடிய அறையில் இன்று புதன்கிழமை விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கல்முனை நீதவான் ஐ.எல். ரிஸ்வான் முன்னிலையில் சஹ்ரானின் மனைவி உள்ளிட்ட மூன்று பேர் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, ஈஸ்டர் தாக்குதல்களுக்கு முன்னர் தங்களுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டவர்கள் குறித்து பல விடயங்களை சஹ்ரானின் மனைவி தெரிவித்துள்ளார்.

மேலும், தாக்குதல்களுக்கு முன்னர் சாய்ந்தமருதில் தங்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் குறித்தும் அவர் இதன்போது தகவல் வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூலை மாதம் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து கல்முனை நீதவான் ஐ.எல். ரிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க