உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

ஓய்வு பெற்ற தொடரூந்து பணியாளர்கள் மீண்டும் அரசசேவையில்!

தொடரூந்து (ரயில் ) சேவையை அத்தியாவசிய சேவையாக்குவதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

மேலும், ஓய்வு பெற்ற தொடரூந்து இயந்திர சாரதிகள், நிலைய அதிபர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோரை மீண்டும் சேவையில் இணைத்து கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவர்களை சேவைகளில் இணைத்து கொள்வதற்கான ஒழுங்குகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு நாரஹேன்பிட்டி சாலிகா மண்டபத்தில் மேற்கொள்ளப்படவுள்ளன.

கருத்து தெரிவிக்க