உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சனை ஒரு மாதத்துக்குள் தீர்வு- அமைச்சரவை

கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரச்சனைக்கு ஒரு மாதத்துக்குள் தீர்வைக் காணுவதற்கு அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளது.

நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின்போது இந்த விடயத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது.

இதன்போது விளக்கமளித்த உள்துறை அமைச்சர் வஜிர அபேவர்த்தன, இந்த பிரச்சனை 1989ஆம் ஆண்டில் இருந்து தீர்க்கப்படாமல் இருந்து வருவதாக குறிப்பிட்டார்.

இந்தநிலையில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி சுயாதீன அமைப்பாக செயற்படவைப்பது உட்பட்ட ஏனைய பிரச்சனைகளுக்கும் தீர்வைக் காண்பது என்று அமைச்சரவை முடிவெடுத்தது.

இந்த பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக்கோரி அண்மையில் உணவுத்விர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது

கருத்து தெரிவிக்க